ADDED : ஜூன் 15, 2024 01:15 AM
சென்னை:தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ் உள்ள அரசு மற்றும் தனியார் கால்நடை மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பு என்ற பி.வி.எஸ்சி., - ஏ.ஹெச்., மற்றும் பி.டெக்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம், https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில், 3ம் தேதி துவங்கியது. வரும் 21ம் தேதி மாலை 5:00 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
அயல்நாடு வாழ் இந்தியர், அவர்கள் வாரிசுகள், அவர்களின் நிதி ஆதரவு பெற்றோர் ஆகியோர் ஜூலை 5ம் தேதி மாலை 5:00 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இதுவரை, பி.வி.எஸ்சி., - ஏ.ஹெச்., படிப்புக்கு 9,100 பேரும், பி.டெக்., படிப்புகளுக்கு 1,900 பேர் என, 11,000 பேர் விண்ணப்பித்துஉள்ளனர்.

