ADDED : நவ 04, 2024 05:20 AM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நுண்கலை மன்றம் சார்பில் நாடகப் பயிலரங்கம் நடந்தது. முதல்வர் சரவணன் தலைமை வகித்தார்.
வணிகவியல் துறை பேராசிரியர் வளர்மதி வரவேற்றார். நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் விழாவில் அழகப்பா பல்கலை திரைப்பட படிப்புகள் துறை ஆசிரியர் பாஞ்சாலி ராஜன், தலைமை நாடக ஆசிரியர் சுரேஷ்குமார் நாடகத்தை பயிற்றுவித்தனர்.
