/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கழுத்தை நெரித்து மனைவி கொலை; கணவருக்கு ஆயுள் தண்டனை
/
கழுத்தை நெரித்து மனைவி கொலை; கணவருக்கு ஆயுள் தண்டனை
கழுத்தை நெரித்து மனைவி கொலை; கணவருக்கு ஆயுள் தண்டனை
கழுத்தை நெரித்து மனைவி கொலை; கணவருக்கு ஆயுள் தண்டனை
ADDED : பிப் 07, 2024 12:25 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாட்டகுளத்தில் மது குடிக்க பணம் தர மறுத்த மனைவி ராதிகாவை அடித்து, உதைத்து ஸ்கிப்பிங் கயறால் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவர் கிருஷ்ணசாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பாட்டக்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி,37, கூலித் தொழிலாளி. இவரது மனைவி ராதிகா, 30, இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளது.
2019 மே 19ல் மது குடிக்க பணம் கேட்டு மனைவி ராதிகாவிடம் கிருஷ்ணசாமி தகராறு செய்து, அடித்து உதைத்து, இரும்பு கட்டிலில் முட்ட வைத்து ஸ்கிப்பிங் கயறால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
கிருஷ்ணன்கோவில் போலீசார் கிருஷ்ணசாமியை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் கிருஷ்ணசாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜான்சி ஆஜரானார்.

