sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சிவகாசி சிறுகுளம் கண்மாய் கரையில் நடைபாதை அமைக்கும் பணி துவக்கம்

/

சிவகாசி சிறுகுளம் கண்மாய் கரையில் நடைபாதை அமைக்கும் பணி துவக்கம்

சிவகாசி சிறுகுளம் கண்மாய் கரையில் நடைபாதை அமைக்கும் பணி துவக்கம்

சிவகாசி சிறுகுளம் கண்மாய் கரையில் நடைபாதை அமைக்கும் பணி துவக்கம்


ADDED : பிப் 03, 2024 06:01 AM

Google News

ADDED : பிப் 03, 2024 06:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : தினமலர் செய்தி எதிரொலியாக சிவகாசி சிறுகுளம் கண்மாய் கரையில் ரூ. 1 கோடி மதிப்பில் நடைபாதை அமைக்கும் பணி துவங்கியது.

சிவகாசி சிறுகுளம் கண்மாய் கரை அப்பகுதியில் முழுவதும் திறந்த வெளி கழிப்பறையாக மாறி குப்பைகளும் கண்மாய் கரையிலேயே கொட்டப்பட்டு வந்தது. எனவே கரையில் நடைபாதையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து சிவகாசி நகராட்சி நுாற்றாண்டு சிறப்பு நிதியில் கண்மாய் கரையில் புதிய நடைபாதை அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பூமி பூஜை 2022 செப். ல் நடந்தது. அதன்படி கண்மாய் கரையில் 2 மீட்டர் அகலம், 841 மீட்டர் நீளத்திற்கு புதிய நடைபாதை ஏற்படுத்தி, தடுப்புச் சுவர் அமைத்து, கழிவுநீர் கலக்காத வகையில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, தடுப்பு வேலிகள் அமைக்கப்பட இருந்தது. ஆனால் இதுவரையிலும் எந்தப் பணியும் துவங்கவில்லை. இதனால் கண்மாய் கரை முழுவதும் முட்புதர்கள் ஆக்கிரமித்துள்ளது. தவிர மீண்டும் திறந்தவெளி கழிப்பறையாக மாறியதோடு குப்பைகளும் கொட்டப்பட்டு வருகின்றது. அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. எனவே உடனடியாக நடைபாதை அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக மாநகராட்சி மேயர் சங்கீதா, துணை மேயர் விக்னேஷ் பிரியா, கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபாதை அமைக்கும் பணி துவங்கியது. இதற்காக முதல் கட்டமாக கண்மாய் கரை சீரமைக்கப்பட்டது.

மேயர் கூறுகையில், நுாற்றாண்டு நிதியில் சிறுகுளம் கண்மாய் கரையில் நடைபாதை அமைத்து , கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும், என்றார்.






      Dinamalar
      Follow us