sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

குழாய் உடைந்து கண்மாயில் கலக்கும் குடிநீர்

/

குழாய் உடைந்து கண்மாயில் கலக்கும் குடிநீர்

குழாய் உடைந்து கண்மாயில் கலக்கும் குடிநீர்

குழாய் உடைந்து கண்மாயில் கலக்கும் குடிநீர்


ADDED : மார் 16, 2024 12:00 AM

Google News

ADDED : மார் 16, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : திருத்தங்கலில் பழைய வெள்ளையாபுரம் ரோட்டில் மானுார் கூட்டுக் குடிநீர் திட்டம் நீரேற்றும் நிலையம் அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாகி செங்குளம் கண்மாயில் கலப்பதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

திருத்தங்கல் பழைய வெள்ளையாபுரம் ரோட்டில் போலீஸ் ஸ்டேஷன் அருகே மானுார் குட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தரை நீர்த்தேக்க நிலையமும், மேல்நிலை குடிநீர் தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கிருந்து நகர் முழுவதும் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது.

இதற்காக குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீர் தேக்க தொட்டி அருகிலும் பழைய வெள்ளையாபுரம் ரோட்டிலும் அடுத்தடுத்து குழாய் உடைந்து குடிநீர் வெளியேறி ரோட்டில் ஆறாக பெருக்கெடுத்து ஓடி அருகிலுள்ள செங்குளம் கண்மாயில் கலக்கின்றது.

திருத்தங்கல் பகுதியில் கடந்த 6 மாதமாக 20 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இதுவும் அனைவருக்கும் போதாத நிலையில், மக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

எனவே உடைந்த குழாய்களை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us