/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் சாரல் மழை பட்டாசு ஆலைகள் மூடல்
/
சிவகாசியில் சாரல் மழை பட்டாசு ஆலைகள் மூடல்
ADDED : நவ 20, 2024 02:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி:விருதுநகர் மாவட்டம் விருதுநகர், சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை சுற்றுப்பகுதியில் நாக்பூர், சென்னை, டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற 1080 பட்டாசு ஆலைகள் உள்ளன.
பொதுவாக தீபாவளி முடிந்த ஒரு வாரத்திற்கு பின் பட்டாசு ஆலைகள் உற்பத்தி பணியை துவக்கும்.
அதன்படி இந்த ஆண்டும் ஆலைகள் திறக்கப்பட்டன.
ஆனால் சிவகாசி சுற்றுப்பகுதியில் ஒரு வாரமாக அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
இதனால் பட்டாசு உற்பத்தி பணி பாதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி பணியை நிறுத்தி ஆலைகளை மூடிவிட்டனர்.

