ADDED : பிப் 04, 2024 11:58 PM
அ நிறம் | அளவு
சிவகாசி: சிவகாசியில் போலீசார் சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி டூ வீலரில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தனஞ்ஜெயன் டி.எஸ்.பி., கொடியசைத்து துவக்கி வைத்தார். சிவகாசி சப் டிவிசனிறகு உட்பட்ட டவுன், கிழக்கு, திருத்தங்கல், எம்.புதுப்பட்டி மாரனேரி, மகளிர், டிராபிக் போலீசார் பங்கேற்றனர். டி.எஸ்.பி., அலுவலகத்தில் துவங்கிய ஊர்வலம் பஸ் ஸ்டாண்ட், பைபாஸ் ரோடு வழியாக திருத்தங்கல் பஸ் ஸ்டாண்டில் முடிவடைந்தது.
