/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசியல் தலையீடால் ஆக்கிரமிப்பு அகற்றம் தாமதம்
/
அரசியல் தலையீடால் ஆக்கிரமிப்பு அகற்றம் தாமதம்
ADDED : பிப் 26, 2024 01:04 AM

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி மூலம் வைக்கப்பட்ட பேனர் மாத கணக்கில் தொங்கிக்கொண்டுள்ளது. அரசியல் தலையீடால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் தாமதம் ஏற்படுகிறது.
அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் ரோட்டின் இருபுறம் ஆக்கிரமிப்புகள், நடைபாதை கடை மறைத்து ஆக்கிரமிப்புகள், கடைகளில் சன் ஷேடுகளை வைத்து போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடைஞ்சல் செய்கின்றனர். நகரில் 12 ஆண்டுகளுக்கு மேல் ஆக ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை இல்லை.
இதனால் நகரில் நிரந்தர ஆக்கிரமிப்புகள் பல இடங்களில் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி வந்த நிலையில், நகரின் பல பகுதிகளில் நகராட்சி சார்பாக ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான அறிவிப்பு பேனர்கள் வைக்கப்பட்டன. பேனர் வைத்து குறிப்பிட்ட நாளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது வழக்கம்.
ஆனால் பேனர்கள் வைத்து மாத கணக்கில் ஆகியும் நகராட்சி, நெடுஞ்சாலை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். லோக்சபா தேர்தல் வருவதை ஒட்டி தற்போது ஆக்கிரமிப்புகளை அகற்றினால் ஒட்டு வங்கி பாதிக்கப்படும் என அரசியல் கட்சியினர் அதிகாரிகளுக்கு தடை போட்டு உள்ளதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாமல் அதிகாரிகள் தயங்குகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட கலெக்டர் தான் முனைப்பு காட்ட வேண்டும்.

