sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நிலத்தடி நீரை உறிஞ்சுவதை  கண்காணிப்பது அவசியம்! கோடை நேரத்தில் தேவை மேலாண்மை நடவடிக்கை

/

நிலத்தடி நீரை உறிஞ்சுவதை  கண்காணிப்பது அவசியம்! கோடை நேரத்தில் தேவை மேலாண்மை நடவடிக்கை

நிலத்தடி நீரை உறிஞ்சுவதை  கண்காணிப்பது அவசியம்! கோடை நேரத்தில் தேவை மேலாண்மை நடவடிக்கை

நிலத்தடி நீரை உறிஞ்சுவதை  கண்காணிப்பது அவசியம்! கோடை நேரத்தில் தேவை மேலாண்மை நடவடிக்கை


ADDED : ஏப் 03, 2024 07:22 AM

Google News

ADDED : ஏப் 03, 2024 07:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : மாவட்டத்தில் நிலத்தடி நீரை உறிஞ்சுவதை முறையாக கண்காணிப்பது அவசியமாகி உள்ளது. மே மாதம் பெய்யும் கோடை மழையை சேமிக்க மாவட்ட நிர்வாகம் நீர்மேலாண்மை நடவடிக்கை எடுப்பதும் தேவையாக உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணறுகள் மூலமாகவும், வெளியூர் நீராதாரங்கள், நீர் தேக்கங்கள் மூலமாக குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. விருதுநகர், சாத்துார், சிவகாசி, நரிக்குடி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மினிலாரிகளில் விநியோகிக்கப்படும் குடிநீர் வாங்கி தான் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு விநியோகிக்கப்படும் நீர் ஊற்றுக்கிணறு, ஆழ்துளை கிணறு மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சி பெரும்பாலும் விற்கப்படுகிறது. இது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்தாலும், மக்கள் விலைக்கு குடிநீர் வாங்கும் சூழலை ஏற்படுத்தி உள்ளது.

நகராட்சிகள், பேரூராட்சிகள், ஒன்றிய நிர்வாகங்களுக்கு குடிநீர் வரி செலுத்தியும் பலனில்லாத சூழல் உள்ளது. இவ்வாறு தனியார் விநியோகிக்கும் குடிநீரானது எந்தளவுக்கு சுத்திகரிக்கப்படுகிறது என்ற கேள்வி ஒரு பக்கம் இருந்தாலும், இந்த விநியோகம், நிலத்தடிநீரை உறிஞ்சும் தன்மை ஆகியவை முறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதற்கு பதில் இல்லை. இதனால் நாளுக்கு நாள் நிலத்தடிநீர் குறைந்து கொண்டே வருகிறது.

ஏற்கனவே நிலத்தடி நீரானது விருதுநகர் மாவட்டத்தில் சிவப்பு மண்டலத்தில் உள்ளது. கடந்த பருவமழையில் அதீத மழை பெய்து கண்மாய் உள்ள நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்திருந்தது. தற்போது மார்ச்சில் இருந்தே கடும் வெயில் வாட்டி வருவதால் நீர்நிலைகள் வற்றி வருகின்றன. அதே நேரம் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து வருகிறது. கோடை நெருங்கும் சூழலில் நிலத்தடிநீரை உறிஞ்சுவதை முறைப்படுத்தி கண்காணிப்பது அவசியமாகி உள்ளது. உள்ளூர் நீராதாரங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் குடிநீர் வழங்கும் திறனை மேம்படுத்தி மக்களுக்கு சீரான குடிநீரை வழங்க வேண்டிய அதே நேரத்தில் மே மாதம் பெய்யும் கோடை மழையை நிலத்தடி நீராக சேமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர்பகுதிகளில் தான் மினிலாரிகளில் வரும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வாங்குகின்றனர். ஊரகப்பகுதிகளில் உள்ளாட்சி தண்ணீரை தான் பயன்படுத்துகின்றனர். நீர்மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும்.






      Dinamalar
      Follow us