sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

திருத்தங்கலில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு; கருத்தடை மையம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது

/

திருத்தங்கலில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு; கருத்தடை மையம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது

திருத்தங்கலில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு; கருத்தடை மையம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது

திருத்தங்கலில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு; கருத்தடை மையம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது


ADDED : பிப் 05, 2024 12:04 AM

Google News

ADDED : பிப் 05, 2024 12:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : திருத்தங்கல் பாண்டி கோவில் தெரு, திருப்பதி நகரில் நடமாடும் தெரு நாய்களால் குடியிருப்புவாசிகள் அவதிப்படுகின்றனர். சிவகாசியில் உள்ள தெரு நாய் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்து நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருத்தங்கல் பாண்டி கோவில் தெரு, திருப்பதி நகரில் அதிக அளவில் தெரு நாய்கள் நடமாடுகின்றன. இவை ரோட்டில் போவோர் வருவோரை கடித்து துன்புறுத்துகிறது. பள்ளி மாணவர்களை விரட்டுகிறது.

டூவீலரில் செல்வோரை விரட்டுகையில் விபத்தில் சிக்குகின்றனர். சிறுவர்கள் தெருவில் விளையாட முடியவில்லை. இதேபோல் சிவகாசி மாநகராட்சி முழுவதும் கோயில், பள்ளிகள் குடியிருப்புகள் உள்ள பகுதிகளில் அதிக அளவில் தெரு நாய்கள் நடமாடுகின்றது.

சிவகாசி விஸ்வநத்தம் ரோட்டில் 10 ஆண்டுகளுக்கு முன்பு தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. இந்த கருத்தடை அறுவை சிகிச்சை மையம் முறையாக செயல்படாததால் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாநகராட்சியில் சுற்றித் திரியும் 480 தெருநாய்கள் அடையாளம் காணப்பட்டு, தனியார் அமைப்பு மூலம் கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய ரூ.3.36 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் நிதி ஒதுக்கப்படாததால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதனால் ரோட்டில் சுற்றி திரியும் தெரு நாய்களால் விபத்து ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுவதாக புகார்கள் வந்தது. எனவே மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தெரு நாய் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தை சீரமைக்க ரூ.3.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் அடுத்த கட்ட நடவடிக்கையை துவக்கவில்லை. எனவே தெரு நாய் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தை சீரமைத்து நாய்களை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us