sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சிவகாசியில் சுற்றுவட்டச்சாலை அமைக்க முதற்கட்ட நில எடுப்பு பணிகள் நிறைவு

/

சிவகாசியில் சுற்றுவட்டச்சாலை அமைக்க முதற்கட்ட நில எடுப்பு பணிகள் நிறைவு

சிவகாசியில் சுற்றுவட்டச்சாலை அமைக்க முதற்கட்ட நில எடுப்பு பணிகள் நிறைவு

சிவகாசியில் சுற்றுவட்டச்சாலை அமைக்க முதற்கட்ட நில எடுப்பு பணிகள் நிறைவு


ADDED : நவ 24, 2024 07:36 AM

Google News

ADDED : நவ 24, 2024 07:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : சிவகாசியில் சுற்றுவட்டச் சாலை அமைப்பதற்கான முதற்கட்ட நில எடுப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. முதல் கட்டமாக 10.4 கிலோ மீட்டருக்கு சுற்றுவட்டச் சாலை அமைக்கும் பணி திட்டமிடப்பட்டுள்ள நிலையில் விரைவில் பணிகளை துவங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சிவகாசி மாநகராட்சியில் பட்டாசு, தீப்பெட்டி ஆலைகள், அச்சகங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை உள்ளடக்கிய நகரத்தில் தற்போதைய பெரும் அச்சுறுத்தல் போக்குவரத்து நெருக்கடிதான். நகரில் மெயின் ரோடுகள் அனைத்தும் மிகுந்த போக்குவரத்து நெரிசலில் காணப்படுகின்றன.

இதனை தவிர்ப்பதற்காக 2012 முதல் சிவகாசியில் சுற்றுவட்டச் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2022 முதல் தீவிர நில எடுப்பு பணிகள் நடந்து வருகிறது. அதன்படி சிவகாசியில் சுற்றிலும் சுற்றுவட்டச் சாலை 34 கிலோ மீட்டர் துாரத்திற்கு அமைகிறது.

இப்பணி மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. கீழ திருத்தங்கல், திருத்தங்கல், நாரணாபுரம், அனுப்பன்குளம், வெற்றிலையூரணி, ஆனையூர், ஈஞ்சார் , வடபட்டி, நமஸ்கரித்தான் பட்டி கிராமங்கள் வழியாக சுற்றுவட்டச் சாலை செல்கிறது. இதற்கான நில எடுப்பு பணிகள் இரண்டு ஆண்டுகளாக துரிதப்படுத்தப்பட்டு முடிவடைய உள்ளது.

இந்நிலையில் முதற்கட்டமாக பூவநாதபுரம் விலக்கு முதல் வடமலாபுரம் வரை 10.4 கிலோமீட்டர் நில எடுப்பு பணிகள் முடிந்துள்ளது. கீழ திருத்தங்கல், ஆனையூர் என இரு பகுதிகளில் ரயில் தண்டவாளம் செல்வதால் பாலம் அமைக்க ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

சிவகாசியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்துார், விருதுநகர், கழுகுமலை -, சாத்துார், ,ஆலங்குளம், எரிச்சநத்தம்,கன்னிசேரி, விஸ்வநத்தம் - ,வெங்கடாசலபுரம் உள்ளிட்ட ரோடுகள் சுற்றாக இணைக்கப்படும்.

இந்த சிவகாசி வெளி சுற்றுவட்டச் சாலை பணியில், முதற்கட்ட பணி மட்டும் நடந்தால் எரிச்சநத்தம் வழியாக ஸ்ரீவில்லிபுத்துார் சிவகாசிக்கு எளிதில் சென்று வர முடியும். இப் பணி குறித்து சமீபத்தில் சிவகாசிக்கு வருகை தந்த அமைச்சர் வேலு ஆய்வு செய்து விரைவில் சுற்றுவட்டச் சாலை அமைக்கும் பணி துவங்கும் என கூறியிருந்தார்.

அதன்படி விரைவில் சுற்றுவட்டச் சாலை அமைக்கும் பணியை துவக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us