ADDED : ஜூன் 27, 2025 12:34 AM

அ நிறம் | அளவு
காரியாபட்டி: காரியாபட்டி சூரனூரில்பழமை வாய்ந்த ஆனந்தவள்ளி கைலாசநாதர் கோயில் வளாகத்தில் களை செடிகள் முளைத்து புதர் மண்டி கிடந்தது.
சாயல்குடி சிவனடியார்கள் உழவாரப்பணி குழு சார்பாக, குருக்கள் ரவிச்சந்திரன் தலைமையில் உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது. சிவனடியார்கள் பங்கேற்று உழவாரப் பணி செய்தனர்.
அர்ச்சகர் தெய்வசிகாமணி, ஜனசக்தி பவுண்டேஷன் நிறுவனர் சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
