sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சாத்துாரில் பட்டாசு கோடவுனில் வெடிவிபத்து

/

சாத்துாரில் பட்டாசு கோடவுனில் வெடிவிபத்து

சாத்துாரில் பட்டாசு கோடவுனில் வெடிவிபத்து

சாத்துாரில் பட்டாசு கோடவுனில் வெடிவிபத்து


UPDATED : மே 01, 2025 01:31 AM

ADDED : மே 01, 2025 01:07 AM

Google News

UPDATED : மே 01, 2025 01:31 AM ADDED : மே 01, 2025 01:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்:சாத்துார் அருகே, முத்தாண்டியாபுரத்தில் சட்டவிரோதமாக பழைய தீப்பெட்டி ஆலையில் ஸ்டாக் வைத்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் கட்டடம் சேதமடைந்தது.

விருதுநகர் மாவட்டம், முத்தாண்டியாபுரத்தைச் சேர்ந்தவர் ரகுநாதன், 50. இவருக்கு சொந்தமாக டி.ஆர்.ஓ., லைசென்ஸ் பெற்ற பட்டாசு ஆலை உள்ளது. இங்கு தயாரிக்கப்பட்ட பேன்சி ரக பட்டாசுகளை, இப்பகுதியில் இவருக்கு சொந்தமான பழைய தீப்பெட்டி ஆலையில் சட்ட விரோதமாக இருப்பு வைத்துள்ளார்.

மேலும், இங்கு பட்டாசுக்கான குழாய் தயாரிப்பில் ஈடுபட்டு, அவற்றில் ரசாயன மருந்தும் செலுத்தப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 4:30 மணிக்கு திடீரென பேன்சி ரக பட்டாசுகள் வெடிக்கத் துவங்கின. தீப்பெட்டி ஆலையின் கூரை முற்றிலும் சேதம் அடைந்தது.

வெம்பக்கோட்டை, ஏழாயிரம் பண்ணை, சாத்துார் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில், யாரும் காயம் அடையவில்லை. கட்டடம் சேதம் அடைந்தது.

விபத்து குறித்து ரகுநாதன் மகன்கள் குருநாதன், மணிசங்கர் ஆகியோரிடம், ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us