sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நடுவபட்டியில் சேதம் அடைந்த நுாலக கட்டடத்தை இடிக்க எதிர்பார்ப்பு

/

நடுவபட்டியில் சேதம் அடைந்த நுாலக கட்டடத்தை இடிக்க எதிர்பார்ப்பு

நடுவபட்டியில் சேதம் அடைந்த நுாலக கட்டடத்தை இடிக்க எதிர்பார்ப்பு

நடுவபட்டியில் சேதம் அடைந்த நுாலக கட்டடத்தை இடிக்க எதிர்பார்ப்பு


ADDED : நவ 02, 2025 04:29 AM

Google News

ADDED : நவ 02, 2025 04:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: -சிவகாசி அருகே நடுவபட்டியில் இடிந்து விழும் நிலையில் உள்ள நுாலக கட்டடத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அதை இடித்து அகற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சிவகாசி அருகே நடுவபட்டியில் எம்.பி., தொகுதி நிதியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு நுாலக கட்டடம் கட்டப்பட்டது. சில ஆண்டுகள் மட்டுமே நுாலகம் செயல்பட்டு வந்த நிலையில் சேதம் அடைந்து விட்டது. தற்போது கட்டடம் முழுவதுமே சிமெண்ட் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இப்பகுதி சிறுவர்கள் விபரீதம் அறியாமல் சேதமடைந்த கட்டடத்தின் அருகே விளையாடுகின்றனர். மக்கள் நடமாடும் போது இடிந்து விழுந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்தக் கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும்.

இங்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் நுாலகம் உள்ள நிலையில், இப்பகுதியில் சமுதாயக்கூடம் இல்லாத நிலையில் விசேஷங்கள் நடத்துவதற்கு மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த இடத்தில் சமுதாய கூடம் கட்ட வேண்டும் என மக்கள் எதிர்பார்க் கின்றனர்.






      Dinamalar
      Follow us