/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அங்கன்வாடி கட்டடங்களை இடிப்பதில் தாமதம் புதிதாக கட்ட டெண்டர் விட்டும் பயனில்லை
/
அங்கன்வாடி கட்டடங்களை இடிப்பதில் தாமதம் புதிதாக கட்ட டெண்டர் விட்டும் பயனில்லை
அங்கன்வாடி கட்டடங்களை இடிப்பதில் தாமதம் புதிதாக கட்ட டெண்டர் விட்டும் பயனில்லை
அங்கன்வாடி கட்டடங்களை இடிப்பதில் தாமதம் புதிதாக கட்ட டெண்டர் விட்டும் பயனில்லை
ADDED : ஜூலை 26, 2025 03:19 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சிகளில் சேதம் அடைந்த அங்கன்வாடி கட்டடங்களை இடிக்க அனுமதி தராமலேயே புதிய கட்டடங்களுக்கு டெண்டர் விட்டுள்ளதால் பணி செய்ய முடியாமல் உள்ளது.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 32 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் மத்திய மாநில அரசின் நிதிகள் மூலம் பொது கழிப்பறைகள், சமுதாய கூடங்கள் குளியலறைகள் ,அங்கன்வாடி கட்டடங்கள் உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் செய்யப்படுகின்றன. பல ஊராட்சிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அங்கன்வாடி மையங்கள் சேதம் அடைந்து இடியும் நிலையில் உள்ளது. இவற்றை கணக்கெடுத்து புதியதாக கட்டுவதற்கு அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
சேதமடைந்த அங்கன்வாடி கட்டடங்களை இடித்து விட்டு புதிய கட்டட பணிகளை அங்கு துவங்க வேண்டும். ஆனால் பழைய கட்டடத்தை இடிப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று இடிப்பதில் காலதாமதம் ஆகிறது. கட்டடத்தை இடிப்பதற்கு உள்ளேயே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து புதிய கட்டிடம் கட்டுவதற்கு டெண்டர் விட்டு விடுகின்றனர். இதனால் பணி செய்ய முடிய பழைய கட்டடத்தை இடிக்க முடியாமலும் புதியதாக பணியை தொடங்க முடியாமல் ஒப்பந்ததாரர்கள் திணறுகின்றனர்.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில், செம்பட்டி, ஆத்திபட்டி, செட்டிபட்டி உள்ளிட்ட 10 ஊராட்சிகளில் புதிய அங்கன்வாடி கட்டடங்கள் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால் இவற்றில் பழைய கட்டடங்களை இடிப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் புதிய கட்டிடம் கட்டுவதற்கு காலதாமதம் ஆகிறது.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக சேதமடைந்த கட்டிடங்களை இடிக்க உரிய அனுமதியை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு வழங்கி, புதிய கட்டடப் பணிகளை கால தாமதம் இன்றி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

