sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பள்ளி பஸ் ஸ்டாப் அருகில் திறந்த நிலையில் வாறுகால்

/

பள்ளி பஸ் ஸ்டாப் அருகில் திறந்த நிலையில் வாறுகால்

பள்ளி பஸ் ஸ்டாப் அருகில் திறந்த நிலையில் வாறுகால்

பள்ளி பஸ் ஸ்டாப் அருகில் திறந்த நிலையில் வாறுகால்


ADDED : மார் 10, 2024 05:02 AM

Google News

ADDED : மார் 10, 2024 05:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி சிவகாசியில் பள்ளி, பஸ் ஸ்டாப் அருகே இடிந்து திறந்த நிலையிலுள்ள வாறுகாலினால் மாணவர்கள், வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.

சிவகாசி சேர்மன் சண்முக நாடார் ரோட்டில் 3 பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி வளைவில் சுற்றுச் சுவரை ஒட்டி சேர்மன் சண்முகம் நாடார் ரோட்டில் வாறுகால் உள்ளது.

இந்த இடம் பஸ் ஸ்டாப்பாகவும் உள்ளது. இந்நிலையில் பஸ் ஸ்டாப் அருகே வாறுகால் சேதமடைந்து திறந்த நிலையில் உள்ளது. இதில் இருக்கும் கம்பிகள் ரோடு வரை நீட்டிக் கொண்டு இருக்கின்றது. அனைத்து மாணவர்களும் இதனை கடந்து தான் செல்ல வேண்டும்.

மேலும் இதன் அருகிலேயே பஸ் ஸ்டாப் உள்ளதால் பஸ்சிற்காக காத்திருக்கும் மக்கள், மாணவர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். டூவீலர், சைக்கிளில் செல்பவர்கள், சிறிது கவனம் சிதறினாலும் வாறுகாலில் விழ வாய்ப்புள்ளது.

மேலும் இப்பகுதியில் எந்நேரமும் போக்குவரத்து நிறைந்திருக்கும். வளைவு பகுதி என்பதால் கொஞ்சம் கவனம் சிதறி தவறி விழுந்தால் கம்பிகளால் பெரிய அசம்பாவிதம் ஏற்படும்.

எனவே வாறுகாலில் மூடி அமைத்து சீரமைக்க வேண்டும் என மாணவர்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us