/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருத்தங்கல் கருப்பசாமி நகரில் நடுரோட்டில் மின்கம்பம் *அகற்றி ரோடு அமைக்க கோரிக்கை
/
திருத்தங்கல் கருப்பசாமி நகரில் நடுரோட்டில் மின்கம்பம் *அகற்றி ரோடு அமைக்க கோரிக்கை
திருத்தங்கல் கருப்பசாமி நகரில் நடுரோட்டில் மின்கம்பம் *அகற்றி ரோடு அமைக்க கோரிக்கை
திருத்தங்கல் கருப்பசாமி நகரில் நடுரோட்டில் மின்கம்பம் *அகற்றி ரோடு அமைக்க கோரிக்கை
ADDED : நவ 08, 2024 03:58 AM

சிவகாசி: சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் 8 வது வார்டு கருப்பசாமி நகரில் நடுரோட்டில் உள்ள மின்கம்பத்தை அகற்றி ரோடு அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் 8 வது வார்டு கருப்பசாமி நகரில் மெயின் ரோடு சேதமடைந்திருந்தது. இதனைத் தொடர்ந்து இங்கு ரோடு சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது. குறுகிய இந்த ரோட்டின் நடுவில் போக்குவரத்திற்கு இடையூறாக மின்கம்பம் உள்ளது. இதனால் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகின்றது. இந் நிலையில் இந்த மின்கம்பத்தை அகற்றி வேறு இடத்தில் அமைக்காமலேயே ரோடு போடும் பணி துவங்கியுள்ளது. புதிதாக ரோடு போட்ட பின்னர் மின்கம்பத்தை அகற்றினால் ரோடு சேதம் அடையும். எனவே இப்பகுதியில் ரோடு போடுவதற்கும் முன்னரே நடுரோட்டில் உள்ள மின்கம்பத்தை அகற்றி வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

