ADDED : ஏப் 11, 2024 06:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் தேசிய பாதுகாப்பான தாய்மை தினத்தை முன்னிட்டு மரியாதைக்குரிய மகப்பேறு பராமரிப்பு என்ற விழிப்புணர்வு ஊர்வலம் டீன் சீதாலட்சுமி தலைமையில் நடந்தது.
இந்த ஊர்வலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் துவங்கி, அல்லம்பட்டி ரோடு வழியாக மகப்பேறு மருத்துவமனை வளாகத்தை சுற்றி வந்து நிறைவடைந்தது. இதில் டாக்டர்கள், செவிலியர் மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

