sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பட்டாசு ஆலையில் வெடி விபத்து கட்டடம் தரை மட்டம்; பெண் படுகாயம்

/

பட்டாசு ஆலையில் வெடி விபத்து கட்டடம் தரை மட்டம்; பெண் படுகாயம்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து கட்டடம் தரை மட்டம்; பெண் படுகாயம்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து கட்டடம் தரை மட்டம்; பெண் படுகாயம்


ADDED : ஏப் 20, 2024 02:16 AM

Google News

ADDED : ஏப் 20, 2024 02:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி நேஷனல் காலனியில் பேன்சி ரக பட்டாசுகளின் குழாய்களுக்கு கோட்டிங் கொடுக்கும் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் காயமடைந்தார். கட்டடம் தரைமட்டமானது.

சிவகாசி நேஷனல் காலனியை சேர்ந்தவர் விக்னேஷ் 47. அதே பகுதியில் இவருடைய கட்டடத்தில் சந்தனமகாலிங்கம் என்பவர் பேன்சி ரக பட்டாசு தயாரிக்க தேவையான அட்டைக் குழாய்களுக்கு கோட்டிங் செய்யும் பணி செய்து வருகிறார் . இங்கு நேற்று முன்தினம் இரவில் வேலை நடைபெற்று உள்ளது. அப்போது தொழிலாளர்கள் அங்கு இருந்த ஹீட்டர் மிஷினை அணைக்காமல் சென்றுள்ளனர்.

நேற்று காலை 8:15 மணியளவில் திடீரென்று கட்டடத்தின் உள்ளே வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அந்த கட்டடம் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். கட்டடம் வெடிக்கையில் கற்கள் பறந்து சென்று விழுந்ததில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராணி 35, காயமடைந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

விபத்து நடந்த கட்டடத்தின் அருகே குடியிருப்புகள் அதிக அளவில் உள்ளன. கட்டடம் வெடித்தவுடன் சிதறாமல் அப்படியே தரைமட்டமானதால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.






      Dinamalar
      Follow us