/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தேர்தல் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்
/
தேர்தல் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்
ADDED : ஏப் 04, 2024 05:57 AM

சிவகாசி : சிவகாசியில் லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது. சிவகாசியில் முகநுால் நண்பர்கள் குழு, மாவட்ட நிர்வாகம் சார்பில் லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி மாணவர்கள், விநாயகர் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
முதல் முறை வாக்காளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, விஸ்வநாதன் ஆர்.டி.ஓ., தனித்துணை கலெக்டர் பிரேம்குமார், அரசு அலுவலர்கள், மக்கள் கலந்து கொண்டனர்.

