sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குட்கா கடத்தலை தடுத்த எஸ்.ஐ.,க்கு கை முறிவு

/

குட்கா கடத்தலை தடுத்த எஸ்.ஐ.,க்கு கை முறிவு

குட்கா கடத்தலை தடுத்த எஸ்.ஐ.,க்கு கை முறிவு

குட்கா கடத்தலை தடுத்த எஸ்.ஐ.,க்கு கை முறிவு


ADDED : நவ 04, 2024 11:15 PM

Google News

ADDED : நவ 04, 2024 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டாச்சிபுரம்; விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த மழவந்தாங்கல் கூட்ரோடு பகுதியில் குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போதைப்பொருள் தடுப்பு படை எஸ்.ஐ., சண்முகம், கண்டாச்சிபுரம் எஸ்.ஐ.,க்கள் காத்தமுத்து, சரவணன் ஆகியோர் கூட்ரோடு பகுதியில் நேற்று வாகன சோதனை செய்தனர்.

அப்போது, திருவண்ணாமலையிலிருந்து வந்த காரை போலீசார் நிறுத்தினர். அப்போது, சண்முகத்தின் மீது மோதிவிட்டு கார் வேகமாக சென்றது. இதில், சண்முகத்தின் வலது கை எலும்பு முறிந்தது.

தொடர்ந்து, அந்த காரை அடுக்கம் காப்புக்காட்டு பகுதியில் போலீசார் விரட்டி பிடித்தனர்.

காரில், 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 491 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனர். தப்பியவர் குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us