ADDED : செப் 09, 2025 03:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் அழகிரி தலைமையிலான போலீசார் சின்னசெவலை மலட்டாறு பகுதியில் நேற்று அதிகாலை ரோந்து சென்றனர்.
அப்போது மாட்டு வண்டியில் மணல் கடத்துவது தெரியவந்தது. மணல் கடத்திய பெரியசேவலையை சேர்ந்த சங்கர் மகன் அருள், 25; என்பவரை போலீசார் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.