ADDED : டிச 25, 2025 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவி துரை தலைமை தாங்கி தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய மாநில உறுப்பினர் கண்ணன், தாட்கோ மேலாளர் ரமேஷ்குமார் பி.டி.ஓ., க்கள் சையது முகமது நாராயணன் ஆகியோர் வாரிய அடையாள அட்டைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மேலாளர் கலைவாணி,ஒன்றியத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

