ADDED : செப் 13, 2025 03:37 AM
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.
உளுந்துார்பேட்டை அடுத்த சேந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகள் அபிநயா, 19; தனியார் பெண்கள் கல்லுாரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், கடந்த 10ம் தேதி வழக்கம் போல் கல்லுாரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
அவரது தந்தை சுந்தரமூர்த்தி அளித்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் வளவனுாரைச் சேர்ந்தவர் அசோக்குமார் மகள் கீர்த்தி, 19; விழுப்புரம் தனியார் கல்லுாரியில் படித்து வருகிறார். கடந்த 11ம் தேதி கல்லுாரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.