/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாற்றுக் கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்
/
மாற்றுக் கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : டிச 28, 2025 05:25 AM

செஞ்சி: வல்லம் ஒன்றியம், களையூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் 100 பேர் அந்தந்த கட்சிகளில் இருந்து விலகி தி.மு.க., மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர்.
நிகழ்ச்சிக்கு, ஒன்றிய செயலாளர் இளம்வழுதி தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் பிரிவு ஒன்றிய துணை அமைப்பாளர் கார்வண்ணன் வரவேற்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார், தெற்கு ஒன்றிய செயலாளர் துரை, ஒன்றிய நிர்வாகிகள் பாண்டியன், லட்சுமி லட்சுமணன், பத்மநாபன், கதிரவன், அமைப்பு சாரா தொழிலாளர் நல அணி அமைப்பாளர் தமிழரசன், கிளை செயலாளர் ராஜேந்திரன், தட்சணாமூர்த்தி, குமார் பங்கேற்றனர்.

