sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

புனித அந்தோணியார் ஆலயத்தில் சிலுவைப் பாதை ஊர்வலம்

/

புனித அந்தோணியார் ஆலயத்தில் சிலுவைப் பாதை ஊர்வலம்

புனித அந்தோணியார் ஆலயத்தில் சிலுவைப் பாதை ஊர்வலம்

புனித அந்தோணியார் ஆலயத்தில் சிலுவைப் பாதை ஊர்வலம்


ADDED : மார் 30, 2024 06:27 AM

Google News

ADDED : மார் 30, 2024 06:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : சத்தியமங்கலம் புனித அந்தோணியார் தேவாலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப் பாதை ஊர்வலம் நடந்தது.

அதனையொட்டி நேற்று முன்தினம் பெரிய வியாழன் நிகழ்வு நடந்தது.

தொடர்ந்து, நேற்று சிலுவைப் பாதை ஊர்வலம் நடந்தது. பங்கு தந்தை சிரில் தலைமையில் செஞ்சி - திருவண்ணாமலை சாலை வழியாக சிலுவை சுமந்து இயேசுவின் துயரங்களை ஒவ்வொரு படியாக விளக்கி சிறப்பு பிரார்த்தனையுடன் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடந்தது. ஊர்வலத்தில், திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

இதே போல் செஞ்சி புனித மிக்கேல் தேவாலயம் உட்பட செஞ்சி பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

விழுப்புரம்


விழுப்புரத்தில், கிழக்கு பாண்டி ரோட்டில் உள்ள கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் நேற்று காலை 6:00 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து, கிறிஸ்தவர்கள் ரயிலடி தேவாலயத்தில் இருந்து கிறிஸ்து அரசர் தேவாலயம் வரை சிலுவை பாதை பவனி சென்றனர்.

இதில், இயேசு சிலுவையை சுமந்து கொண்டு 14 ஸ்தலங்களின் வழியாக கொண்டு சென்ற நிகழ்வு சித்தரிக்கப்பட்டது.

இதையொட்டி, கிறிஸ்துவர்கள் தங்களின் குடும்பங்களோடு சிறப்பு பிராத்தனையில் ஈடுபட்டனர்.

திண்டிவனம்


திண்டிவனத்தில், புதுச்சேரி சாலையிலிருந்து பங்குதந்தை சவரிமுத்து தலைமையில் கிறிஸ்தவர்கள் சிலுவை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்த ஊர்வலத்தில் ஏராளனமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். ஊர்வலம் புனித வியாகுல அன்னை ஆலயத்தில் முடிந்தது.






      Dinamalar
      Follow us