sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வணிகர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை கடையடைப்பு போராட்டம் வாபஸ்

/

வணிகர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை கடையடைப்பு போராட்டம் வாபஸ்

வணிகர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை கடையடைப்பு போராட்டம் வாபஸ்

வணிகர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை கடையடைப்பு போராட்டம் வாபஸ்


ADDED : ஆக 12, 2024 06:26 AM

Google News

ADDED : ஆக 12, 2024 06:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனத்தில் நாளை நடைபெறுவதாக இருந்த வணிகர் சங்கங்களின் கடையடைப்பு போராட்டம் பேச்சுவார்த்தைக்கு பிறகு வாபஸ் பெறப்பட்டது.

திண்டிவனத்தில் நடைபெற்று வரும் பாதளா சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். பழுதடைந்துள்ள நேரு வீதியில் புதிய சாலை போட வேண்டும் என்பதை வலியுறுத்தி திண்டிவனம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நாளை 13ம் தேதி ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, நேற்று காலை 11:30 மணியளவில், திண்டிவனம் பெருமாள் கோவிலில், நகரமன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமையில் வணிகர் சங்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர் ராமு, குடிநீர் வடிகால் வாரிய இளநிலை பொறியாளர் சுரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர், 'நாளை (இன்று) இரவு முதல் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட நேரு வீதி உள்ளிட்ட சாலைகளை சீரமைத்து புதியதாக சாலை போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதியளித்து அதற்கான கடித்தை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, நாளை 13ம் தேதி நடைபெற இருந்த கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக வணிகர் சங்கத்தினர் அறிவித்தனர்.






      Dinamalar
      Follow us