/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிவன்மலை உத்தரவு பெட்டியில் புடவை ஜவுளி தொழிலில் முன்னேற்றம் வருமா
/
சிவன்மலை உத்தரவு பெட்டியில் புடவை ஜவுளி தொழிலில் முன்னேற்றம் வருமா
சிவன்மலை உத்தரவு பெட்டியில் புடவை ஜவுளி தொழிலில் முன்னேற்றம் வருமா
சிவன்மலை உத்தரவு பெட்டியில் புடவை ஜவுளி தொழிலில் முன்னேற்றம் வருமா
ADDED : செப் 27, 2024 02:49 AM

காங்கேயம்:திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே, சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில் உள்ளது. இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில், பக்தர்கள் கனவில் சுப்ரமணியசுவாமி கூறும் பொருள் வைக்கப்பட்டு, பூஜை செய்யப்படும் நிகழ்வு, நுாற்றாண்டாக நடக்கிறது. அடுத்த பொருள் வரும் வரை, முந்தைய பொருள் இடம் பெறும். பெட்டியில் வைக்கப்படும் பொருள், நடப்பதை முன்கூட்டி கணிப்பதாக அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கடைசியாக பெட்டியில் ஆக., 17ம் தேதிமுதல், இரு இளநீர் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் வீரணம் கிராமம் சிவக்குமார், 30, என்ற பக்தரின் கனவில் சிவப்புநிற புடவை வைக்க உத்தரவானது. இதையடுத்து ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்று முதல் புடவை வைத்து பூஜை செய்யப்படுகிறது. இளநீர் வைத்தபோது தேங்காய், தேங்காய் பருப்பு விலை கூடியது குறிப்பிடதக்கது. 'புடவை வைத்துள்ளதால் ஜவுளி உற்பத்தி, நெசவு தொழில் ஏற்றம் பெறலாம்' என்று, சிவாச்சாரியார் ஒருவர் தெரிவித்தார்.

