sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 21, 2025 ,புரட்டாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அமராவதி அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு; இரு மாவட்டங்களில் 47,117 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்

/

அமராவதி அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு; இரு மாவட்டங்களில் 47,117 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்

அமராவதி அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு; இரு மாவட்டங்களில் 47,117 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்

அமராவதி அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு; இரு மாவட்டங்களில் 47,117 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்


ADDED : செப் 19, 2025 09:13 PM

Google News

ADDED : செப் 19, 2025 09:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையிலிருந்து, புதிய, பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டது. இதனால், திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள 47 ஆயிரத்து, 117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54 ஆயிரத்து, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. தென்மேற்கு பருவ மழை காரணமாக, கடந்த ஜூன் 16ல் அணை நிரம்பியது.

தொடர்ந்து, நான்கு மாதமாக அணையிலிருந்து, ஆறு மற்றும் பிரதான கால்வாய் வாயிலாக உபரி நீர் நேற்று வரை திறக்கப்பட்டு வந்தது. இவ்வாறு, 9 டி.எம்.சி., நீர் வந்துள்ள நிலையில், 5 டி.எம்.சி., வரை உபரியாக திறக்கப்பட்டுள்ளது.

அணையிலிருந்து கடந்த, ஜூன் 7ம் தேதி முதல், பழைய ஆயக்கட்டு, ராஜவாய்க்கால் பாசனத்திலுள்ள, 7,520 ஏக்கர் நிலங்களுக்கு நீர் திறக்கப்பட்டு, வரும், அக்., 20ம் தேதி வரை, குறுவை நெல் சாகுபடிக்கு நீர் வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் கோரிக்கை அடிப்படையில், நேற்று அமராவதி அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி, எம்.பி., ஈஸ்வரசாமி, மண்டல தலைவர் பத்மநாபன், கோட்டாட்சியர் குமார், நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முருகேசன், செயற்பொறியாளர் சுப்ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதன் வாயிலாக, அமராவதி பழைய ஆயக்கட்டு, அலங்கியம் முதல் கரூர் வரை, ஆற்றின் வலது கரை, 10 கால்வாய் பாசனத்திற்குட்பட்ட, 21 ஆயிரத்து, 867 ஏக்கர் நிலங்களுக்கு, வரும், 2026 ஜூன் 31 வரை, 4,233.60 மில்லியன் கனஅடி நீர் வழங்கப்படுகிறது.

அதே போல், புதிய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள, 25 ஆயிரத்து, 250 ஏக்கர் நிலங்களுக்கு, பிரதான கால்வாய் வழியாக , 2,661.12 மில்லியன் கனஅடி நீர் வழங்கப்படுகிறது. பாசன நிலங்களுக்கு, 134 நாட்களில், 70 நாட்கள் நீர் திறப்பு, 64 நாட்கள் அடைப்பு என்ற அடிப்படையில் நீர் வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு, உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், கரூர், அரவக்குறிச்சி தாலுகாவிலுள்ள, 47 ஆயிரத்து, 117 ஏக்கர் நிலங்கள் பயன்பெற உள்ளது.

அணை நிலவரம் அமராவதி அணையில் நேற்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள,, 90 அடியில், 88.59 அடி நீர்மட்டம் இருந்தது. மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கனஅடியில், 3,919.31 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 357 கனஅடி நீர் வரத்து இருந்தது.

அணையிலிருந்து, 275 கன அடி நீர் வெளியேற்றப்பட்டிருந்தது. நேற்று மாலை, 5:30 மணி முதல், ஆறு மற்றும் பிரதான கால்வாயில் பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us