sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்த சிறப்பு கூட்டம்

/

அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்த சிறப்பு கூட்டம்

அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்த சிறப்பு கூட்டம்

அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்த சிறப்பு கூட்டம்


ADDED : மார் 12, 2024 09:10 PM

Google News

ADDED : மார் 12, 2024 09:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்த, உடுமலை வட்டாரத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகள் தயாராகின்றன.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, கற்றலை ஊக்குவிக்கும் வகையில், இலவச பாடப்புத்தகங்கள், சீருடைகள் உட்பட பல்வேறு நலத்திட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இதனால் அம்மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகை தருகின்றனர். இந்நிலையில் அரசுப்பள்ளிகளில் அடிப்படை கற்றல் இடைநிற்றல் இல்லாமல் தொடர்வதற்கு, காலை உணவு திட்டம் நடப்பாண்டிலிருந்து செயல்படுத்தப்படுகிறது.

துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, காலையில் மகளிர் சுய உதவிக்குழுவினர் வாயிலாக, உணவு தயார்செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இதற்கென அரசு பள்ளிகளில் கட்டமைப்புகளும் வடிவமைக்கப்பட்டு, தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாரம்தோறும், சேமியா, உப்புமா, பொங்கல் உள்ளிட்ட உணவு வகைகள் வழங்கப்படுகிறது.

இத்திட்டம் பெற்றோரிடம் வரவேற்பு பெற்றுள்ளது. இதன் அடுத்த கட்டமாக, அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் திட்டத்தை விரிவுபடுத்த அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் வரும் புதிய கல்வியாண்டு, 2024 - 25 முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் துவக்க நிலை வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்த உடுமலை வட்டார பள்ளிகளுக்கு சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

உடுமலை வட்டாரத்தில் கணபதிபாளையம், குறிச்சிக்கோட்டை, சின்னபுத்துார் உள்ளிட்ட மூன்று கிராமங்களில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் துவக்கநிலை வகுப்புகள் உள்ளன.

இப்பள்ளிகளில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான கட்டமைப்பு அமைப்பதற்கு தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், 'தற்போது கிராமப்பகுதிகளில் உள்ள, அரசு உதவிபெறும் பள்ளிகளை தயாராக இருக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதன் அடிப்படையில் அந்தந்த பள்ளி நிர்வாகத்தினருக்கு ஆயத்தப்பணிகளை மேற்கொள்வதற்கு கூட்டம் நடத்தப்பட்டது' என்றனர்.






      Dinamalar
      Follow us