sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பாண்டியாறு - மாயாறு இணைப்பு திட்டம் கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றம்

/

பாண்டியாறு - மாயாறு இணைப்பு திட்டம் கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றம்

பாண்டியாறு - மாயாறு இணைப்பு திட்டம் கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றம்

பாண்டியாறு - மாயாறு இணைப்பு திட்டம் கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றம்


ADDED : அக் 03, 2024 08:39 PM

Google News

ADDED : அக் 03, 2024 08:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:'பாண்டியாறு - மாயாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்' என, திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் நடந்த பல்வேறு கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீலகிரி மாவட்டம், கூடலுார் அருகே உருவாகும் பாண்டியாறு நீரை, தெப்பக்காடு மாயாறுடன் இணைப்பதன் வாயிலாக, பவானி ஆற்றில், கூடுதலாக, 3 டி.எம்.சி., தண்ணீர் கிடைக்கும் என, தமிழக மூத்த பொறியாளர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில், நேற்று முன்தினம் நடந்த கிராம சபை கூட்டங்களில், பாண்டியாறு பூர்வாங்க பாசன சபை கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நொய்யல் ஆறு பாதுகாப்பு சங்கம், கவுசிகா நதி கரங்கள், பாண்டியாறு - சேவூர் மையம், களஞ்சியம் விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.

பாண்டியாறு - மாயாறு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று மனு அளித்தனர். இதை தொடர்ந்து தொரவலுார், ஆலத்துார், சேவூர், அய்யம்பாளையம், புளியம்பட்டி உட்பட பல ஊராட்சிகளில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

ரூ.100 கோடியில் சாத்தியம்

பாண்டியாறு பூர்வாங்க பாசன சபை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பிரபு கூறியதாவது:

ஈரோடு, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் வறட்சி பகுதிகளை உள்ளடக்கிய அனைத்து குளம், குட்டைகளையும் நிரப்புவது தான் பாண்டியாறு - மாயாறு இணைப்புத் திட்டத்தின் நோக்கம். பழைய பாண்டியாறு - புன்னம்புழா திட்டம் நிறைவேற, கேரள அரசின் அனுமதி தேவை.

ஆனால், கேரளாவின் ஒத்துழைப்பு தமிழகத்திற்கு கிடைக்கப் போவதில்லை. பாண்டியாறு - மாயாறு இணைப்பு திட்டத்தை, 100 கோடி ரூபாயில் நிறைவேற்ற முடியும். திட்டம் நிறைவேறினால், மேற்கு தமிழகம், தண்ணீர் தேவையில் தன்னிறைவு பெறும்.

இதுதொடர்பாக கிராம ஊராட்சியில் நிறைவேற்றப்படும் தீர்மானம், மாநில அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us