/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகராட்சியில் ஒரே நாளில் ரூ.1.10 கோடி வரி வசூல்
/
நகராட்சியில் ஒரே நாளில் ரூ.1.10 கோடி வரி வசூல்
ADDED : மே 01, 2025 05:08 AM
வெள்ளகோவில் : மாநகராட்சி, நகராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வரி இனங்கள் உரிய காலத்தில் செலுத்துபவர்களுக்கு, 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. வெள்ளகோவில் நகராட்சி ஆய்வாளர் குருசாமி, வருவாய் உதவியாளர் துறை முருகானந்தன் ஆகியோர் இந்த தகவலை பொதுமக்கள் இடையே கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நேற்று ஒரே நாளில், ஒரு கோடியே, 10 லட்சம் ரூபாய் வரி வசூல் செய்தனர். ஒரு நாளில், 23 சதவீத வரி வசூலித்து, தரவரிசை பட்டியலில் தமிழகத்தில் முதலிடத்தை வெள்ளகோவில் பிடித்துள்ளது. இதற்காக, பொதுமக்கள் மற்றும் வரி வசூல் செய்த அலுவலர்களை நகராட்சி கமிஷனர் வெங்கடேசன் பாராட்டினார்.

