sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தேரோடும் வழிதடத்தை சீரமைக்க வலியுறுத்தல்

/

தேரோடும் வழிதடத்தை சீரமைக்க வலியுறுத்தல்

தேரோடும் வழிதடத்தை சீரமைக்க வலியுறுத்தல்

தேரோடும் வழிதடத்தை சீரமைக்க வலியுறுத்தல்


ADDED : மார் 18, 2024 11:02 PM

Google News

ADDED : மார் 18, 2024 11:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:உடுமலை, மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, தேரோடும் வீதிகளை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

உடுமலையில், சுற்றுப்பகுதி கிராம மக்கள் வழிபடும் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழா, ஏப்., 9ம் தேதி துவங்குகிறது. அன்று நோன்பு சாட்டுதலுடன் துவங்கி, 16ம் தேதி கம்பம் போடுதல் நிகழ்ச்சி, 24ம்தேதி திருக்கல்யாணம் மற்றும் 25ம்தேதி தேரோட்டம் நடக்கிறது.

வேறு மாவட்டங்களிலிருந்தும், ஆயிரக்கணக்கானோர் தேரோட்டத்தை பார்வையிட வருகின்றனர். தேரோட்டம் சிறப்பாக நடப்பதையொட்டி, உடுமலை சுற்றுப்பகுதியில் வளம் மேம்படும், மழைபொழிவு இருக்கும் என மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

தேரோடும் வீதிகளில் முறையான பராமரிப்பும் அவசியமாக உள்ளது. குண்டும் குழியுமான ரோடுகளால் தேரோட்டத்தின் போது தாமதமாகவும், சில இடங்களில் சிக்கலாகவும் மாறுகிறது.

நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், இந்த தேரோடும் வீதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

நடப்பாண்டில் திருவிழா துவங்குவதற்கு, குறுகிய நாட்கள் மட்டுமே இருப்பதால், சீரமைப்பு பணிகளை முறையாகவும், முழுமையாகவும் மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us