sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 விதி மீறல் பிளக்ஸ் பேனர்கள் அதிகரிப்பு: அலட்சிய அதிகாரிகளால் மக்கள் பாதிப்பு

/

 விதி மீறல் பிளக்ஸ் பேனர்கள் அதிகரிப்பு: அலட்சிய அதிகாரிகளால் மக்கள் பாதிப்பு

 விதி மீறல் பிளக்ஸ் பேனர்கள் அதிகரிப்பு: அலட்சிய அதிகாரிகளால் மக்கள் பாதிப்பு

 விதி மீறல் பிளக்ஸ் பேனர்கள் அதிகரிப்பு: அலட்சிய அதிகாரிகளால் மக்கள் பாதிப்பு


UPDATED : டிச 25, 2025 08:14 AM

ADDED : டிச 25, 2025 06:07 AM

Google News

UPDATED : டிச 25, 2025 08:14 AM ADDED : டிச 25, 2025 06:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலையில், விதி மீறி பிளக்ஸ் பேனர்கள் அதிகளவு வைக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதால், பொதுமக்கள் பாதித்து வருகின்றனர்.

உடுமலை நகரப்பகுதிகளில், ரோடு சந்திப்புகள், பஸ் ஸ்டாண்ட், வணிக வளாகங்கள் அதிகம் உள்ள பகுதி, பஸ் ஸ்டாப்கள் என அனைத்து பகுதிகளிலும், அரசியல் கட்சிகள், வணிக நிறுவனங்கள் சார்பில், நுாற்றுக்கணக்கான பேனர்கள் நிறுவப்பட்டுள்ளன.

பிரதான ரோடுகளான, பழநி ரோடு, பொள்ளாச்சி ரோடு, தாராபுரம் ரோடு, தளி ரோடு, திருப்பூர் ரோடு, ராஜேந்திரா ரோடு மற்றும் தளி ரோடு சந்திப்பு, பஸ் ஸ்டாண்ட், அனுஷம் ரோடு சந்திப்பு என அனைத்து இடங்களிலும்,பிரமாண்ட பிளக்ஸ் பேனர்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

பொது இடங்களில், பிளக்ஸ் பேனர்கள் வைக்கக் கூடாது என, அரசு மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகள் உள்ள நிலையிலும், விதி மீறி, இவ்வாறு அமைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களால், பொதுமக்களுக்கு கவனச்சிதறல், விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

மேலும், பெரும்பாலான பகுதிகளில், பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரோடுகளை மறைத்து வைத்துள்ளதால், போக்குவரத்து பாதித்து வருகிறது.

பல இடங்களில் காற்றுக்குத்தாங்காமல், வாகன ஓட்டுனர்கள் மீது விழுந்து விபத்துக்களையும் ஏற்படுத்தி வருகிறது.

எனவே, விதி மீறி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்றவும், அவற்றை வைத்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவும், நகராட்சி அதிகாரிகள், போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us