/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பையில்லா மாநகராட்சி உருவாக ஐகோர்ட் வழிகாட்டுதல் நல்வாய்ப்பு
/
குப்பையில்லா மாநகராட்சி உருவாக ஐகோர்ட் வழிகாட்டுதல் நல்வாய்ப்பு
குப்பையில்லா மாநகராட்சி உருவாக ஐகோர்ட் வழிகாட்டுதல் நல்வாய்ப்பு
குப்பையில்லா மாநகராட்சி உருவாக ஐகோர்ட் வழிகாட்டுதல் நல்வாய்ப்பு
ADDED : டிச 11, 2025 04:52 AM

திருப்பூர், டிச. 11-
திருப்பூர் மாநகராட்சி சார்பில் முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பை கொட்டப்பட்டு வந்தது. 'அதற்கு தடைவிதிக்க வேண்டும்' என, திருப்பூர் சுற்றுச்சூழல் குழு சார்பில் வேலுசாமி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். பலமுறை நடந்த விசாரணையை தொடர்ந்து, இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.வேலுசாமி கூறியதாவது:
திருப்பூர் மாநகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை சட்டம், 2016, முறைப்படி கடைபிடிக்க வேண்டும். குப்பையை தரம் பிரித்து வாங்கி, அந்த வார்டுகளிலேயே அவற்றை தரம் பிரித்து மக்கும் குப்பையில் உரம் தயாரிப்பது; மக்காத குப்பையை மறுசுழற்சிக்கு அனுப்பி வைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வழிகாட்டுதல் வழங்க வேண்டும்.'முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பை கொட்டக்கூடாது' என சுட்டிக்காட்டியுள்ள ஐகோர்ட், 'குப்பை கொட்ட தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட இடத்தில் கூட, தரம் பிரிக்கப்பட்ட குப்பையை தான் கொட்ட வேண்டும்' என வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.குப்பையில்லா மாநகராட்சியாக திருப்பூரை மாற்ற, ஐகோர்ட் வழிகாட்டுதல் நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிது. குப்பை பிரச்னையை சமாளிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மேயர், கமிஷனர் ஆகியோர், தன்னார்வ அமைப்பினர், சூழலியல் செயற்பாட்டாளர்கள், ரோட்டரி, லயன்ஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரை ஒருங்கிணைத்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது துவங்கி, கழிவு மேலாண்மை பணிகள் வரை முன்னெடுத்தால், குப்பை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.
---
அகற்றப்படாமல் தேங்கியுள்ள குப்பைகள்.
இடம்: மணியகாரம்பாளையம்.
--
வேலுசாமி
பொன்னுசாமி

