/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோடையில் கொட்டிய மாமழையால் மகிழ்ச்சி
/
கோடையில் கொட்டிய மாமழையால் மகிழ்ச்சி
ADDED : ஏப் 06, 2025 09:46 PM

- நமது நிருபர் -
கோடைக்காலம் துவங்கிய நாளில் இருந்தே, திருப்பூர் மாவட்டம் முழுவதும், வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்தது.
யாரும் எதிர்பாராத வகையில், மாலை, 6:30 மணிக்கு மேல், சில இடங்களில் மட்டும் மழை தலைகாட்டி சென்றது.
இரவு, 11:15 மணி முதல், மீண்டும் மழை துவங்கியது; தொடர்ந்து, இடி, மின்னலுடன் கனமழை பெய்ய துவங்கியது. கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் பெய்தமழையால் திருப்பூர் சுற்றுப்பகுதி குளிர்ந்தது.
மாவட்டத்தில், கலெக்டர் முகாம் அலுவலகம் - 150 மி.மீ., கலெக்டர் அலுவலகம் - 130 மி.மீ., ஊத்துக்குளி தாலுகா - 120 மி.மீ., திருப்பூர் வடக்கு தாலுகா - 110 மி.மீ., திருப்பூர் தெற்கு தாலுகா - 96 மி.மீ., அவிநாசி - 75 மி.மீ., பல்லடம் - 28 மி.மீ., திருமூர்த்தி அணை பகுதி - 25 மி.மீ., அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.

