/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உண்டு, உறைவிட வசதிகளுடன் யு.பி.எஸ்.சி., தேர்வு இலவச பயிற்சி
/
உண்டு, உறைவிட வசதிகளுடன் யு.பி.எஸ்.சி., தேர்வு இலவச பயிற்சி
உண்டு, உறைவிட வசதிகளுடன் யு.பி.எஸ்.சி., தேர்வு இலவச பயிற்சி
உண்டு, உறைவிட வசதிகளுடன் யு.பி.எஸ்.சி., தேர்வு இலவச பயிற்சி
ADDED : ஏப் 11, 2025 11:14 PM
திருப்பூர்; திருப்பூர் சேவா பாரதி அமைப்பினர் கூறியதாவது: சேவா பாரதி அமைப்பு சார்பில், சென்னை அண்ணா நகரில், பாரதி பயிலகம் - ஐ.ஏ.எஸ்., அகாடமி செயல்படுகிறது. கடந்த 2020 முதல் அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
கடந்த 2022 முதல் உண்டு, உறைவிட வசதி யுடன் இப்பயிற்சி தகுதியான மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது.
கடந்தாண்டு 1,600 பேர் இதற்கான தகுதி தேர்வு எழுதி, 63 பேர் பயிற்சியில் இணைந்தனர். கடந்த இரு ஆண்டுகளில் இங்கு பயின்றவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று பணியிடம் பெற்றுள்ளனர்.
நடப்பாண்டு பயிற்சி வகுப்புகளில் சேர்வதற்கான தகுதி தேர்வு வரும், 18ம் தேதி நடைபெறவுள்ளது.
இளங்கலை பட்டம் 2024-25 கல்வியாண்டில் பெற்ற ஆண், ெபண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். அனைத்து மாவட்டங்களிலும் இதற்கான தகுதி தேர்வு நடைபெறுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், தாராபுரம் ரோடு, விவேகானந்தா வித்யாலயாவில் தேர்வு நடைபெறும். வரும் 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். https://bharathipayilagam.com/Login/BPIAregisterFormlink என்ற முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 98942 11005 மற்றும் 90032 42208 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

