sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 21, 2025 ,புரட்டாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

உன்னதமே உயர்நிலை! 'சைனோகிராப்' கருத்தரங்கில் இளம் தொழில் முனைவோருக்கு அறிவுரை  

/

உன்னதமே உயர்நிலை! 'சைனோகிராப்' கருத்தரங்கில் இளம் தொழில் முனைவோருக்கு அறிவுரை  

உன்னதமே உயர்நிலை! 'சைனோகிராப்' கருத்தரங்கில் இளம் தொழில் முனைவோருக்கு அறிவுரை  

உன்னதமே உயர்நிலை! 'சைனோகிராப்' கருத்தரங்கில் இளம் தொழில் முனைவோருக்கு அறிவுரை  


ADDED : செப் 20, 2025 07:57 AM

Google News

ADDED : செப் 20, 2025 07:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: ''இளம் தொழில்முனைவோர், வாய்ப்பு கிடைக்கும் போது, உன்னதமாக பயன்படுத்தி, உயர்ந்த நிலையை அடைய வேண்டும்,'' என, சி.ஐ.ஐ., மாநில துணை தலைவர் தேவராஜன் அறிவுறுத்தினார். இந்திய தொழிற் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) மற்றும் 'யங் இந்தியன்ஸ்' அமைப்புகள் சார்பில், தொழில்முனைவோர், தொழில்துறையினர், வர்த்தகர்கள், மாணவ, மாணவியருக்கான, தொழில்நெறி கருத்தரங்கு, திருப்பூர், திருமுருகன்பூண்டி பாப்பீஸ் ஓட்டலில் நேற்று நடந்தது.

சி.ஐ.ஐ., மாவட்ட தலைவர் மனோஜ் வரவேற்றார். 'யங் இந்தியன்ஸ்' திருப்பூர் மாவட்ட தலைவர் மோகன்குமார், 'சைனோகிராப் -3.0' தொழில்நெறி கருத்தரங்கு நடத்துவதன் நோக்கத்தை விளக்கி பேசினார். கருத்தரங்கின் ஒரு பகுதியாக, சிறந்த சேவையாளருக்கான விருதுகள் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம், எழுத்தாளர் சிவதாசன், 'லக்ஸ்' நிறுவன உரிமையாளர் ராகுல் டோடி ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. சி.ஐ.ஐ., துணை தலைவர் சுனில்குமார், 'யங் இந்தியன்ஸ்' துணை தலைவர் விமல்ராஜ் உள்ளிட்டோர் பேசினர்.

காத்திருக்கும் வாய்ப்பு



சி.ஐ.ஐ., மாநில துணை தலைவர் தேவராஜன் பேசியதாவது:

மரத்தில் இருந்து வரும் பலனை அனுபவிக்கிறோம்; மண்ணை கவனிப்பதில்லை என்ற குறைபாடு இருக்கிறது. அதனை நிவர்த்தி செய்யும் வகையில், 'சைனோகிராப்' கருத்தரங்கு நடத்தப்படுகிறது. உலகம் எவ்வளவோ மாறிவிட்டது. இது, 3வது கருத்தரங்கு. 10 வது கருத்தரங்கு நடக்கும் போது, திருப்பூர் நிறுவனங்கள், உலக அளவில் பிரசித்தி பெற்ற, 500 'பிராண்ட்'களை உருவாக்கி இருக்க வேண்டும்.

திருப்பூர் இன்னும் எத்தனை நாட்களுக்கு, யாருக்கோ வேலை செய்ய வேண்டும். சொந்த 'பிராண்ட்' உருவாக்க வேண்டும், அரசுக்கு, மாதம், 2 லட்சம் கோடி ரூபாய், ஜி.எஸ்.டி. வருவாய் கிடைக்கிறது. அரசும் தேவையான உதவியை செய்ய தயாராக இருக்கிறது. அடுத்து என்ன செய்யலாம் என்று திட்டமிட வேண்டும். இந்தியா எத்தகைய சாதனையையும் அடைய முடியும் என்ற உலக நாடுகள் உணர்ந்துள்ளன. நம்மிடையே திறமைகள் குவிந்து கிடக்கின்றன. திருப்பூரில், ஆய்வக வசதியுடன் கூடிய நிறுவனஜங்கள் இருக்காது. தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

திருப்பூர் என்றாலே பின்னலாடை மற்றும் ஏற்றுமதி மட்டும்தான் என்று இருக்கக் கூடாது. 'டிசைன் ஸ்டுடியோ' போன்ற வசதிகள் திருப்பூரிலேயே உருவாக்கப்பட வேண்டும். இளம் தொழில்முனைவோர், ஆயிரம் பேரில் ஒருவராக இருக்க கூடாது. நம்முடைய 'பிராண்ட்' நாடு முழுவதும் பிரசித்தி பெற்றதாக மாற வேண்டும்.

இன்றைய இளைஞர்கள் குறுவட்டத்துக்குள் இருக்காதீர்கள்; சாதனை படைக்க ஏராளமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. வாய்ப்பு கிடைக்கும் போது, அதனை உன்னதமாக பயன்படுத்தி, உயர்ந்த நிலையை அடைய வேண்டும். அதேநேரத்தில், ஒழுக்கமானர்களாக, நேர்மையானவர்களாக இருக்க வேண்டும்; அப்போதுதான், நிலையான வெற்றியை அடைய முடியும். இவ்வாறு, அவர் பேசினார்.

தொடர்ந்து, தொழில்துறையினர், வழிகாட்டி ஆலோசகர்கள் என, பல்வேறு தலைப்புகளில் பேசினர். ஒவ்வொரு அமர்வின் போதும், தொழில்துறையினர் மற்றும் மாணவ, மாணவியர், தங்களது சந்தேகங்களுக்கு தெளிவு பெற்றனர்.

வழிகாட்டியாக அமையும்!

திருப்பூர் தொழில்துறையினருக்கு வழிகாட்டும் வகையில், 'சைனோகிராப்' நடத்தப்படுகிறது. தொழில்துறையினர், தொழில்முனைவோ், வர்த்தகர்கள், எதிர்கால தொழில்முனைவோராகிய மாணவர்கள் பயன்பெறும் வகையில், 25 தொழில் வல்லுனர்கள் பங்கேற்கும் கருத்தரங்கு நடத்தப்படுகிறது; எதிர்கால தொழில் வளர்ச்சிக்கும், திட்டமிடலுக்கும், இக்கருத்தரங்கு வழிகாட்டியாக அமையும்.
- மனோஜ் சி.ஐ.ஐ., தலைவர்

அனைத்து அம்சங்களும்..

. நம் கையெழுத்து, ஆட்டோகிராப்பாக மாறும் போது அதிக மதிப்பெண் பெறுகிறது. அதற்காகவே, தொழில் முன்னேற்றத்துக்காக, 'சைனோகிராப்' நடத்தப்படுகிறது. சென்னை, கோவை, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் நடத்தப்படும் இக்கருத்தரங்கு திருப்பூர் இளம் தொழில் முனைவோருக்காக நடத்துகிறோம். தொழில் துறையினருக்கு மட்டுமல்லாது, ஆரோக்கியம், மாணவர் வழிகாட்டுதல், பெண் தொழிலாளர் ஊக்குவிப்பு என, மனித வாழ்க்கைக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி, கருத்தரங்கு நடத்தப்படுகிறது.,
- மோகன்குமார் 'யங் இந்தியன்ஸ்' மாவட்ட தலைவர்

சோதனை கடந்து சாதனை

'சைனோகிராப்' நிகழ்ச்சியில், திருப்பூர் வளர்ச்சிக்கு தோள் கொடுத்த சாதனையாளர்களை கவுரப்படுத்தி வருகிறோம். திருப்பூரின் சாதனைகளுக்கு பின்னால், மாபெரும் சாதனையாளர்கள் இருக்கின்றனர். பல்வேறு சோதனைகளை கடந்து சாதனை படைத்துள்ளனர். கடின உழைப்பு, விடாமுயற்சி, தெளிவான பார்வை ஆகியவையே மாபெரும் வெற்றியை தேடித்தரும். சமுதாயத்தில் இருந்து தேவையானவற்றை தேடி எடுப்பது, நமது வாழ்வின் அங்கம்; சமுதாயத்துக்கு கொடுப்பதுதான் வாழ்க்கையின் அர்த்தம். - விமல்ராஜ் 'யங் இந்தியன்ஸ்' துணை தலைவர்








      Dinamalar
      Follow us