sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 சேதமான பஸ் ஸ்டாண்ட் நடை பாதையால் பாதிப்பு

/

 சேதமான பஸ் ஸ்டாண்ட் நடை பாதையால் பாதிப்பு

 சேதமான பஸ் ஸ்டாண்ட் நடை பாதையால் பாதிப்பு

 சேதமான பஸ் ஸ்டாண்ட் நடை பாதையால் பாதிப்பு


ADDED : டிச 26, 2025 06:32 AM

Google News

ADDED : டிச 26, 2025 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலை பஸ் ஸ்டாண்ட் பகுதியில், மழை நீர் வடிகால் மீது அமைக்கப்பட்ட நடை பாதை பல இடங்களில் உடைந்துள்ளதால், பொதுமக்கள் உள்ளே விழுந்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகளவு நடந்து வருகிறது.

உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு தினமும், 300க்கும் மேற்பட்ட பஸ்களில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியே வரும் பயணியர், நடந்து செல்லும் வகையில், பைபாஸ் ரோட்டில், சி.டி.சி., பணிமனை முதல், ரவுண்டானா வரை, மழை நீர் வடிகால் மீது, கான்கிரீட் அமைத்து, நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மழை நீர் வடிகாலில், பெரும்பாலும் சாக்கடை கழிவுநீர் செல்லும் வகையில் உள்ளது, நடை பாதை பல இடங்களில் சிதிலமடைந்தும், ஓட்டை விழுந்தும் காணப்படுகிறது. இதில் நடந்து வரும், பொதுமக்கள், குழந்தைகள் தவறி, மிக ஆழமாக உள்ள சாக்கடை கால்வாயில் விழும் சம்பவங்கள் அதிகளவு நடந்து வருகிறது.

அதிலும், இரவு நேரங்களில் போதிய விளக்கு வசதியில்லாததால், அடிக்கடி பொதுமக்கள் விழுத்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும், மது போதை ஆசாமிகள் பலர் உள்ளே விழுந்து இறக்கும் சம்பங்களும் நடந்து வருகிறது.

எனவே, பஸ் ஸ்டாண்ட் நடை பாதையை உடனடியாக புதுப்பிக்க, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us