sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கு 7ம் தேதி பயிற்சி வகுப்பு துவக்கம்

/

 டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கு 7ம் தேதி பயிற்சி வகுப்பு துவக்கம்

 டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கு 7ம் தேதி பயிற்சி வகுப்பு துவக்கம்

 டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கு 7ம் தேதி பயிற்சி வகுப்பு துவக்கம்


ADDED : டிச 30, 2025 07:30 AM

Google News

ADDED : டிச 30, 2025 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலையில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி முகாம் நடக்கிறது.

டி.என்.பி.எஸ்.சி., சார்பில், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர் நிலை -2 என குரூப்-2 பணிகளுக்கும், முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், உதவியாளர் போன்ற, குரூப்-2 ஏ பணிகளுக்கும், 2026 அக்., 25ல், முதல்நிலைத்தேர்வு நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் போன்ற குரூப்-4 பணிகளுக்கு, 2026 டிச., 20 தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள், திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் கூடுதல் பயிற்சி மையமான, உடுமலை எக்ஸ்டன்சன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில், வரும், ஜன., 7ம் தேதி, காலை, 10:30 மணிக்கு தொடங்குகிறது.

மேலும், இப்பயிற்சியில் மாதம் இருமுறை மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இத்தேர்வுக்கான இலவசப் பயிற்சியில் கலந்து கொள்ள, தங்கள் பெயரை திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421- -2999152 மற்றும் 94990 55944 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம், என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us