sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 வரிசை கட்டும் பிரச்னை அதிகாரிகளுக்கு 'அர்ச்சனை'

/

 வரிசை கட்டும் பிரச்னை அதிகாரிகளுக்கு 'அர்ச்சனை'

 வரிசை கட்டும் பிரச்னை அதிகாரிகளுக்கு 'அர்ச்சனை'

 வரிசை கட்டும் பிரச்னை அதிகாரிகளுக்கு 'அர்ச்சனை'


ADDED : டிச 16, 2025 06:42 AM

Google News

ADDED : டிச 16, 2025 06:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குப்பையை அள்ளுங்க...


1. திருப்பூர், புதிய பஸ் ஸ்டாண்ட் பின், வடக்கு உழவர் சந்தை நுழைவு வாயில் முன் குப்பை அள்ளாமல் நிறைந்து காணப்படுகிறது.கடும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.

- துரைசாமி, புதிய பஸ் ஸ்டாண்ட்.2. திருப்பூர், தென்னம்பாளையம், எஸ்.கே. மருத்துவமனை வீதியில் வழிநெடுக கொட்டப்பட்டுள்ள குப்பையால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. குப்பை அள்ள வேண்டும்.- பாரதிராஜா, தென்னம்பாளையம். (படம் உண்டு)ஆக்கிரமிப்பு அகற்றணும்!

திருப்பூர், பல்லடம் ரோடு, வீரபாண்டி செல்லும் ரிங்ரோட்டில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.- மாணிக்கம், வீரபாண்டிபிரிவு. தெருவிளக்கு எரிவதில்லைதிருப்பூர், கே.பி.என். காலனி, அண்ணா நகர் விரிவு எக்ஸ்டன்சன் பகுதியில் தெருவிளக்கு எரிவதில்லை. வீதி முழுதும் இருள்சூழ்ந்து காணப்படுகிறது.

- சுப்பு, கே.பி.என். காலனி. (படம் உண்டு)

போக்குவரத்து இடையூறுதிருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு ஸ்டாப், நால்ரோடு சந்திப்பில், வாகனங்கள் கடந்து செல்ல வழியில்லாமல், போக்குவரத்துக்கு இடையூறு 'பேரிகார்டு' வைக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.

- ஆறுமுகபாலா, கோல்டன்நகர். (படம் உண்டு)

புகையால் மூச்சுத்திணறல்

திருப்பூர் மாநகராட்சி, ஒன்றாவது வார்டு, பிரியங்கா நகரில் குப்பைகள் தீ வைத்து எரிப்பதால், அவ்வழியாக செல்வோர் மூச்சுத்திணறலுக்கு ஆளாகின்றனர். எனவே, குப்பைகளை அகற்ற வேண்டும்.

- பழனிசாமி, பிரியங்கா நகர். (படம் உண்டு)

கழிவுநீரால் அவதி

திருப்பூர், காங்கயம் ரோடு, ராக்கியாபாளையத்தில் கழிவுநீர் ரோட்டில் திறந்து விடுவதால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. அசுத்தம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ராஜசேகர், ராக்கியாபாளையம். (படம் உண்டு)

விழும் நிலையில் கம்பம்

திருப்பூர், குமரன் ரோடு, பின்னிகாம்பவுண்ட் சந்திப்பு சாலையில் விழும் நிலையில் உள்ள கம்பத்தை அகற்ற வேண்டும். இதனால், அபாயம் காத்திருக்கிறது.

- முபாரக் பாஷா, குமரன் ரோடு. (படம் உண்டு)

தடுப்பது யார்

அவிநாசி, தாலுகா ஆபீஸ் சுற்றுச்சுவரில் சகட்டுமேனிக்கு விளம்பர அறிவிப்பு, போஸ்டர்கள் ஒட்டப்படுகிறது. அரசு அலுவலக சுவராக இருந்தாலும், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.

- மணி, அவிநாசி.

ரியாக் ஷன்

குப்பை அள்ளிட்டாங்க

திருப்பூர், கல்லாங்காடு, முத்து நகரில் குப்பை தேங்கியிருப்பதாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் குப்பைகள் அள்ளி விட்டனர்.

- ராமலிங்கம், கல்லாங்காடு. (படம் உண்டு)






      Dinamalar
      Follow us