ADDED : ஏப் 21, 2024 11:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை;உடுமலை-ஆனைமலை ரோட்டில், தேவனுார்புதுார் அமைந்துள்ளது. மாவட்ட எல்லையில், அமைந்துள்ள இக்கிராமத்துக்கு, பொள்ளாச்சி, உடுமலையில் இருந்து, 20க்கும் அதிகமான பஸ்கள் இயக்கப்படுகின்றன. சுற்றுப்பகுதியில் இருந்து, இச்சந்திப்பு பகுதிக்கு, நாள்தோறும் நுாற்றுக்கணக்கான மக்கள் வருகின்றனர். ஆனால், அப்பகுதியில் நிழற்கூரை வசதியில்லை.
எனவே, உடுமலை ஒன்றிய நிர்வாகம், அச்சந்திப்பு பகுதியில், ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிழற்கூரை அமைக்க வேண்டும்.

