/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூடுதல் பஸ்கள் இயக்க மக்கள் வலியுறுத்தல்
/
கூடுதல் பஸ்கள் இயக்க மக்கள் வலியுறுத்தல்
ADDED : மார் 28, 2024 10:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை;உடுமலையை சுற்றியுள்ள கிராமங்களுக்கு, கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் ஏராளமான கிராமங்கள் அமைந்துள்ளன. இக்கிராம மக்கள் பல்வேறு பணிகளுக்கு செல்ல டவுன் பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், உடுமலையிலிருந்து கடைக்கோடி கிராமங்களுக்கு செல்ல போதிய அளவில் பஸ்கள் இல்லை. குறைந்த அளவில் இயக்கப்படும் பஸ்களுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதுள்ளது. எனவே, கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்து கழகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

