sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

/

ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்


ADDED : ஏப் 15, 2024 09:06 PM

Google News

ADDED : ஏப் 15, 2024 09:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:உடுமலை பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு, தினமும் நுாற்றுக்கணக்கான புறநகர் பஸ்களும், டவுன்பஸ்களும் இயக்கப்படுகின்றன. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியூர், மற்றும் கிராமங்களுக்கு செல்ல பஸ் ஸ்டாண்ட் வருகின்றனர்.

இதனால், பகல் நேரங்களில் பஸ் ஸ்டாண்ட் பரபரப்பாக இயங்கும். திருப்பூர், மூணாறு பஸ்கள் நிற்குமிடத்தில் பயணியருக்கு இடம் உள்ளது. இந்த இடத்தில் சிறு, சிறு கடைகள் அமைக்கப்பட்டு ஆக்கிரமித்துக்கொள்கின்றனர்.

இதன் காரணமாக, பயணியர் நிற்கவும், அமரவும் இடமில்லாமல் பஸ் ஸ்டாண்ட் நடுப்பகுதியில் வந்த நிற்க வேண்டியதுள்ளது. அவர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us