/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கண்காணிப்பு கேமரா அமைக்க எதிர்பார்ப்பு
/
கண்காணிப்பு கேமரா அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 09, 2024 09:05 PM
உடுமலை;உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா அமைக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில் உள்ள உடுமலை ரயில்வே ஸ்டேஷன் வழியாக, கோவை - மதுரை, பாலக்காடு - திருச்செந்துார், பாலக்காடு - சென்னை, திருவனந்தபுரம் - மதுரை, மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ஆகிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும், இந்த ரயில்வே ஸ்டேஷனுக்கு தினமும் நுாற்றுக்கணக்கான மக்கள் டிக்கெட் எடுக்கவும், முன்பதிவு செய்யவும் வருகின்றனர். பல்வேறு நகரங்களிலிருந்து ஏராளமானோர் ரயில்களில், உடுமலை வருகின்றனர். இவர்களின் பாதுகாப்பு கருதியும், சமூக விரோத செயல்களை தடுக்கவும், உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா அமைக்க, தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

