sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'கெபாசிட்டர்' இல்லாத மின் இணைப்பு அபராதம் விதிக்க மின்வாரியம் உத்தரவு மின் நுகர்வோருக்கு அடித்த 'ஷாக்'

/

'கெபாசிட்டர்' இல்லாத மின் இணைப்பு அபராதம் விதிக்க மின்வாரியம் உத்தரவு மின் நுகர்வோருக்கு அடித்த 'ஷாக்'

'கெபாசிட்டர்' இல்லாத மின் இணைப்பு அபராதம் விதிக்க மின்வாரியம் உத்தரவு மின் நுகர்வோருக்கு அடித்த 'ஷாக்'

'கெபாசிட்டர்' இல்லாத மின் இணைப்பு அபராதம் விதிக்க மின்வாரியம் உத்தரவு மின் நுகர்வோருக்கு அடித்த 'ஷாக்'


ADDED : ஆக 27, 2024 11:37 PM

Google News

ADDED : ஆக 27, 2024 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:'கெபாசிட்டர்' பொருத்தாத, மும்முனை மின் இணைப்புள்ள கடை மற்றும் சிறு தொழிற்சாலைகளுக்கு, அபராதம் விதிப்பதால், நுகர்வோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மின்வாரிய உத்தரவுப்படி, 18 எச்.பி., திறனுக்கும் அதிகமான மும்முனை இணைப்பு பெற்ற தொழிற்சாலை இணைப்புகளுக்கு, 'பவர்பேக்டர் - கெபாசிட்டர்' கட்டாயமாக்கப்பட்டது. மும்முனை மின்சாரம் சீராக வினியோகிக்கவும், அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் கூடுதலாக பயன்படுத்துவதை தடுக்கவும், இத்தகைய 'கெபாசிட்டர்' பொருத்தப்பட்டது.

இந்நிலையில், 3 எச்.பி.,க்கு அதிகமான, மும்முனை இணைப்பு உள்ள தொழிற்சாலை மற்றும் வணிக இணைப்புகளுக்கு, 'கெபாசிட்டர்' கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் எவ்வித அறிவிப்பும் செய்யாமல், 'கெபாசிட்டர்' இல்லாத இணைப்புகளுக்கு, மின் கட்டணத்துடன், 3,000 முதல், 4000 ரூபாய் வரையிலான அபராதமும் விதிக்கப்படுகிறது.

வீட்டு இணைப்பு நீங்கலாக, அனைத்து வகையான மும்முனை 'டேரீப்'களுக்கும், இந்த உத்தரவு, இம்மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது. தொழிற்சாலை மற்றும் வணிக இணைப்புகள், ஒவ்வொரு மின் கட்டணத்தின் போதும், 3000 ரூபாய்க்கும் அதிகமாக அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பனியன் தொழிற்சாலை போன்ற தொழிற்சாலைகளுக்கு மட்டும், இது நடைமுறையில் இருந்தது. இந்த மாதம் முதல், சிறுதொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், பெட்டிக்கடை வரை, அனைவருக்கும் கட்டாயமாகி விட்டது.

நடப்பு மாதம், மின் கணக்கீடு செய்து, மின் கட்டணத்தை கணக்கிட்டு வழங்கும் போது, 2,000 ரூபாய் முதல், 5,000 ரூபாய் வரையில், அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால், 60 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் செலுத்தி சிறு தொழில்துறையினரும், 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us