/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மரக்கிளையால் மூடிய நிலையில் சடலம் கொலையா, விபத்தா என விசாரணை
/
மரக்கிளையால் மூடிய நிலையில் சடலம் கொலையா, விபத்தா என விசாரணை
மரக்கிளையால் மூடிய நிலையில் சடலம் கொலையா, விபத்தா என விசாரணை
மரக்கிளையால் மூடிய நிலையில் சடலம் கொலையா, விபத்தா என விசாரணை
ADDED : ஏப் 24, 2024 10:02 PM
உடுமலை:உடுமலையில், ரோட்டோரத்தில் மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்தவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகம் குழிப்பட்டி மலைவாழ் மக்கள் குடியிருப்பைச்சேர்ந்த, மல்லன், 35. நேற்று காலை, உடுமலை - தளி ரோடு, போடிபட்டி தனியார் திருமண மண்டபம் முன், மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
சடலத்தின் மீது, வெட்டிய புளியமரத்தின் கிளைகள் மற்றும் கண்ணாடிகள் உடைந்து சிதறிய நிலையில் காணப்பட்டது.
இது குறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்குச்சென்ற உடுமலை போலீசார் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் கூறுகையில், ' நடந்து சென்றவர் மீது, திட்டமிட்டு வாகனத்தை ஏற்றி கொலை செய்து விட்டு, அதனை மறைக்கும் வகையில் மரத்தை மூடி வைத்து சென்று விட்டார்களாக, விபத்து ஏற்பட்டதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

