/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
திருச்செந்துார் முருகன் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.14 துவக்கம்
/
திருச்செந்துார் முருகன் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.14 துவக்கம்
திருச்செந்துார் முருகன் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.14 துவக்கம்
திருச்செந்துார் முருகன் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.14 துவக்கம்
ADDED : ஏப் 07, 2024 02:11 AM
துாத்துக்குடி:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரை வசந்த திருவிழா ஏப்., 14ம் தேதி துவங்குகிறது.
கோவில் இணை ஆணையர் கார்த்திக் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வசந்த திருவிழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டுக்கான சித்திரை வசந்த திருவிழா ஏப்., 14ல் துவங்கி 23ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
விழா நாட்களில் கோவில் நடை வழக்கம் போல அதிகாலை 4:00 மணிக்கு திறக்கப்பட்டு, 4:30க்கு விஸ்வரூப தரிசனம், 5:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கின்றன.
மதியம் உச்சிகால பூஜையை தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி கிரி பிரகாரத்தில் ராஜகோபுர வாசல் எதிரேயுள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருள்வார்.
மாலை 4:00 மணிக்கு சாயரட்சை தீபாராதனையை தொடர்ந்து வசந்த மண்டபத்தில் சுவாமி ஜெயந்தி நாதருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி தங்க சப்பரத்தில் எழுந்தருளி, மேளதாளம் முழங்க, பக்தர்கள் கப்பல் பாடல்கள் பாடி வசந்த மண்டபத்தை 11 முறை சுவாமி சுற்றி வலம் வந்து தீபாராதனை நடக்கிறது.
பின்னர் சுவாமி தங்கத் தேரில் எழுந்தருளி கிரி வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கோவில் சேருகிறார்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

