/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
துாத்துக்குடியில் போக்சோ வழக்கில் கைதானவருக்கு 20 ஆண்டுகள் சிறை
/
துாத்துக்குடியில் போக்சோ வழக்கில் கைதானவருக்கு 20 ஆண்டுகள் சிறை
துாத்துக்குடியில் போக்சோ வழக்கில் கைதானவருக்கு 20 ஆண்டுகள் சிறை
துாத்துக்குடியில் போக்சோ வழக்கில் கைதானவருக்கு 20 ஆண்டுகள் சிறை
ADDED : ஏப் 23, 2024 09:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் படர்ந்தபுளி பகுதியை சேர்ந்தவர் முருகன், 61, இவர், 2022ம் ஆண்டு 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் மீது, விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை துாத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், குற்றம்சாட்டப்பட்ட முருகனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

