ADDED : நவ 10, 2024 02:46 AM
அ நிறம் | அளவு
நீடாமங்கலம்:திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஆதனுார் மண்டபம் ஏழுமலை, 45, கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் காலை தேங்காய் வாங்க, அருகில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். தாகம் எடுத்துள்ளது.
தேங்காய் வாங்க சென்ற இடத்தில் தண்ணீர் என நினைத்து பாட்டிலில் இருந்த டீசலை குடித்துள்ளார். தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ஏழுமலை நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
